கரைக்காரர்கள், வர்த்தகர்கள் இந்திய பொருட்களை விற்க வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்
நவராத்திரி மற்றும் பண்டிகைக்கால தொடக்கத்தை நாடு முழுவதும் கொண்டாடும் வேளையில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகை அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம் எழுதியுள்ளார்.
ஜிஎஸ்டி 2.0 மூலம் இந்த பண்டிகை கால சீசன் கூடுதல் மகிழ்ச்சியை கொண்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜிஎஸ்டி வரிகள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுள்ளது. இதன்மூலம் குறையும் பொருட்களின் விலை, மக்களின் சேமிப்பு குறித்து விரைவாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்குமாறு கடைக்காரர்களையும், வர்த்தகர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் வாங்குவது சுதேசி (இந்திய தயாரிப்பு பொருட்கள்) என்று பெருமையுடன் கூறுவோம். நாம் விற்பது சுதேசி என்று பெருமையுடன் கூறுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
