வழி தெரியாமல் நின்றபோது எனக்கு வழிகாட்டியவர் விஜய் – செங்கோட்டையன் பேச்சு
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று த.வெ.க. தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:
* வழி தெரியாமல் நின்றபோது எனக்கு வழிகாட்டியவர் விஜய்.
* என் உடலில் ஓடும் ரத்தம் அவருக்காகத்தான் என்று கூறி கண்கலங்கினார்.
* தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்று இயேசு நாதர் சொன்னார்.
* இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லையென்று சொல்லுவதில்லை.
* கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா… கிருஷ்ணா… என்று இந்து மதம் சொல்லும்.
* கேட்காமலேயே தோன்றி இருக்கக்கூடிய தலைவர் தான் நம்முடைய தளபதி. கேட்காமலேயே கொடுக்கக்கூடிய தளபதி நமக்கு கிடைத்து இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகத்திற்கு வெற்றி தளபதி கிடைத்து இருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.c
