Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி – இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எகிப்தை தோற்கடித்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் 7-1, 7-3, 7-6 என்ற நேர் செட்டில் வென்றார். மற்றொரு ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் 3-1 என்ற செட் கணக்கில் வென்றார்.

பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 6-7, 7-5, 7-3, 3-7, 7-3 என 3-2 என்ற செட் கணக்கில் வென்றார். இந்திய அணி இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.