செல்லப்பிராணி உயிரிழந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை!
திருச்சி லால்குடி அருகே உள்ள கீழ அன்பில் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 29). இவர் ஆடு ஒன்றைச் செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். தான் வளர்த்த ஆடு மீது பால்ராஜ் மிகுந்த பாசம் வைத்திருந்தார். அந்த ஆடு திடீரென உயிரிழந்தது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த பால்ராஜ், மங்கம்மாள்புரம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தந்தை வீராசாமி லால்குடி காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் லால்குடி காவல் நிலைய வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
