Tamilசெய்திகள்

ரூ.39 ஆயிரத்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம் விலை – மக்கள் அதிர்ச்சி

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையிலும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 38,776ரூபாயாக இருந்த நிலையில் இன்று 256 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.39,032-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.32 உயர்ந்து, ரூ.4,879-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 67,400 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.66,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *