Tamilவிளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் – இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

 

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பர்மிங்காம் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென் தொடர்ந்து முன்னேறிவருகிறார்.

நேற்று முன் தினம் உலகின் மூன்றாம் தரநிலை வீரரான ஆன்டன் ஆண்டர்சனை 21-16, 21-18 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்திய லக்சயா சென், காலிறுதியை உறுதி செய்தார். நேற்று காலிறுதி
ஆட்டத்தில் சீனாவின் லு குவாங்குடன் லக்சயா சென் மோதுவதாக இருந்தது. ஆனால், சீன வீரர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் லக்சயா சென் போட்டியின்றி
அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் மலேசியாவின் லீ ஜி ஜியா- ஜப்பானின் கென்டோ மொமோட்டா ஆகியோர் விளையாடுகின்றனர். இதில் வெற்றி பெறும் வீரருடன், அரையிறுதியில் லக்சயா சென் மோதுவார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ரெட்டி ஜோடி இந்தோனேசிய ஜோடியிடம் 22-24, 17-21 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்தது.