Tamil

Tamilசெய்திகள்

ஏப்ரல் 25 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வருகிற 25-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வருகிற வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
Tamilசெய்திகள்

தமிழ், ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக எழுத்துப்பிழை இன்றி சாதி சான்றிதழ்கள் இருக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

இசை வேளாளர் சாதிச் சான்றிதழ்களை இசை வெள்ளாளர் எனத் தவறான பெயரில் வழங்கப்பட்டு வருவதாக இசை வேளாளர் இளைஞர் கூட்டமைப்பின் நிறுவனர் குகேஷ் சென்னை ஐகோட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தன் மகளுக்குச் சாதிச் சான்றிதழ் கோரி மாம்பலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தபோது இசை வேளாளர் என்பதை இசை வெள்ளாளர் எனக் குறிப்பிட்டுச் சாதிச் சான்று வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், * ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும். * தமிழ், ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக எழுத்துப்பிழை இன்றி சாதி சான்றிதழ்கள் இருக்க வேண்டும். * சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக்கூடாது. * சாதி சான்றிதழ்களில் எழுத்து பிழைகள் இல்லாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் மனுதாரரின் மகளுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் உள்ள எழுத்துப் பிழைகளை சரி செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.

Read More
Tamilசெய்திகள்

‘ஒரே நாடு, ஒரு தேர்தல்’ குறித்து விவாதிக்க பாராடாளுமன்ற கூட்டுக் குழு இன்று கூடியது!

நாடு முழுவதும் பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கையின் பேரில் மசோதாவானது கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மசோதாவை ஆராய பாஜக எம்பி பிபி சவுத்ரி தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.  ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான பாராளுமன்ற கூட்டு குழுவின் (ஜேபிசி) பதவிக் காலத்தை 2025 மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கும் தீர்மானம் கடந்த மக்களவை கூட்டத்தொடரின்போது அங்கீகரிக்கப்பட்டது. இந்நிலையில் ‘ஒரே நாடு, ஒரு தேர்தல்’ குறித்து விவாதிக்க பாராடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) இன்று (செவ்வாய்க்கிழமை) கூடியது. குழுவின் தலைவர் பிபி சவுத்ரி கூட்டத்திற்காகப் பாராளுமன்ற இணைப்புக் கட்டிடத்திற்கு வந்தார். முன்னதாக, ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றிய வலைத்தளம் தொடங்கப்பட்டது குறித்துப் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “அனைத்து மாநிலங்களுக்கும் சென்று மக்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்று குழு விரும்புகிறது” என்றார்.

Read More
Tamilசெய்திகள்

சென்னை விமான நிலையத்திற்குள் பஸ்கள் சென்று வர ஏற்பாடு!

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் விமான நிலைய வளாகத்துக்குள் மாநகர பஸ்கள் வருவதில்லை. இதனால் பஸ்களில் செல்ல விரும்பும்

Read More
Tamilசெய்திகள்

நியோமேக்ஸ் நிறுவனத்தின் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்!

நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தனர். இந்த நிதி நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல்

Read More
Tamilசெய்திகள்

பெண்ணின் கன்னத்தை கிள்ளி காதல் சொன்ன இளைஞருக்கு தர்ம அடி!

சென்னை தி.நகரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர். ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் வழக்கம்

Read More
Tamilசெய்திகள்

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்தை கைவிடப்படும் – அமெரிக்கா அறிவிப்பு

ரஷியா- உக்ரைன் இடையிலான போர் 3 வருடங்களை தாண்டி 4ஆவது வருடமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில்

Read More
Tamilசெய்திகள்

கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்க குழு – உயர்நீதிமன்றம் பரிந்துரை

கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. பச்சையப்பன், மாநில கல்லூரி மாணவர்கள்

Read More
Tamilசெய்திகள்

சென்னையில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின்

Read More
Tamilசெய்திகள்

இறுதிச் சடங்குகளில் சிறை கைதிகள் பங்கேற சிறைத்துறை அதிகாரிகளே அனுமதிக்கலாம் – அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை

நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம்

Read More