வான்வழி தாக்குதல் சைரன் சத்தத்தை ஊடகங்கள் பயன்படுத்த தடை!
இந்தியா-பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நேற்றிரவு பாகிஸ்தான் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி இந்தியாவின் தலைநகரான டெல்லியை தாக்க முயற்சி செய்துள்ளது.
இந்திய ராணுவம் இந்த முயற்சியை முறியடித்ததுடன், பாகிஸ்தானை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் 6 விமான தளங்களை தாக்கியதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வான்வழித் தாக்குதலின் போது எல்லையோர மாவட்டங்களில் பொதுமக்களின் எச்சரிக்கைக்காக ஒலிக்கப்படும் சைரன் சத்தத்தை பயன்படுத்துவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அறிவுறுத்தியுள்ளது.