Tamilவிளையாட்டு

இஷாந்த் சர்மாவுக்கு மீண்டும் காயம் – 2வது டெஸ்ட்டில் பங்கேற்பது சந்தேகம்

நியூசிலாந்து – இந்தியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்றது. இதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இஷாந்த் சர்மா ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்தத் தொடருக்கு முன் இவர் ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடினார். அப்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இதனால் நியூசிலாந்து தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கடைசி கட்டத்தில் உடற்தகுதியை நிரூபித்து முதல் டெஸ்டில் விளையாடினார்.

நாளை 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. இந்நிலையில் இஷாந்த் சர்மாவுக்கு மீண்டும் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளைய போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

நேற்று காலையில் வலைப்பயிற்சி மேற்கொண்ட இஷாந்த் சர்மா, மாலை நேரத்தில் பயிற்சி மேற்கொள்ளவில்லை. மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின் காயத்தின் தன்மை குறித்து தெளிவான அறிக்கை வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *