Tamilவிளையாட்டு

ஐ.பி.எல் கிரிக்கெட் – ஒரே ஓவரில் நான்கு விக்கெட்கள் வீழ்த்தி ஆண்ட்ரோ ரஸ்ஸல்

15-வது ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற 35-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி 20 ஓவரில் 9
விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 69 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 8 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றி பெற்றது.

குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா சார்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் கடைசி ஓவரில் 5 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு இன்னிங்சின் கடைசி
ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் மற்றும் டி20 போட்டியில் 20வது ஓவரில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற
சாதனையை ரஸ்ஸல் படைத்தார்.

ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் கடைசி ஓவரில் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.