Tamilசினிமா

கதையாசிரியர் ஆன நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் கதாநாயகனாகவும் வலம் வருபவர் யோகி பாபு. இவரின் ‘மெடிக்கல் மிராக்கல்’, ‘பூமர் அங்கிள்’, ‘பொம்மை நாயகி’ போன்ற படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதோடு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இவர் தற்போது புதிய படம் ஒன்றிற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல் படத்தின் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இந்த படத்தை ‘வில் அம்பு’ படத்தை இயக்கிய இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியன் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.