Tamilசெய்திகள்

காங்கேயம் அருகே அரசு பஸ், கார் மோதி விபத்து – 5 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

விபத்து காரணமாக கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விசாரணையில், 60-வது பிறந்த நாளுக்காக திருக்கடையூர் சென்று திரும்பியபோது விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.