Tamilசென்னை 360

குதிரை ஓட்ட மைதானம்

5000 ஆண்டுகளுக்கு முன்பு கஜகிஸ்தானில் குதிரைகள் மனிதனால் அடக்கப்பட்டன. முக்கியமாக அவை போரில் உபயோகப்படும் என்பதால்தான் இந்த முயற்சி.

ஆனால் மனிதக்குலம் எப்போது குதிரைகளால் ஈர்க்கப்பட்டதோ, அப்போதே குதிரைகளை ஒன்றோடொன்று பந்தயத்தில் ஓடவிட்டு அவற்றின் பிடரி ரோமங்கள் காற்றில் பறக்கும் காட்சியைக்கண்டு மனிதர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர்.

குதிரைப் பந்தயம் அனைத்து விளையாட்டுகளிலும் மிகவும் பழமையான ஒன்றாகும். 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க ஒலிம்பிக்கில் குதிரைப் பந்தயம் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. பண்டைய காலங்களிலிருந்து உலகம் முழுவதும் உள்ள நாகரிகங்களிலும் நடைமுறையில் இருந்தது. அதன் அடிப்படை விதிகளும் குறைந்தபட்சம் தொடக்கக் காலத்திலிருந்தே பெரும்பாலும் மாறாமல் உள்ளது. ஆனால் முக்கியமாகப் பழங்காலத்திலிருந்தே இது சூதாட்டத்தை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

View more on kizhakkutoday.in