Tamilசென்னை 360

கிண்டி பொறியியல் கல்லூரி

மெட்ராஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளெல்லாம் அதன் பொறியியல் திறமைக்குப் பெயர் பெற்றது. இன்று மெட்ராஸைச் சேர்ந்த பொறியாளர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.

இந்தியாவின் முதல் அணைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் நவீனத் தொழிற்சாலைகள் துணைக் கண்டத்தின் இந்தப் பகுதியில் மட்டுமே வந்ததற்கு மெட்ராஸின் பொறியியல் விழிப்புணர்வுதான் காரணமாக இருக்க வேண்டும்

அதற்கு முக்கியக் காரணம் நாட்டின் இந்தப் பகுதியில் 250 ஆண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வடிவில் பொறியியல் பயிற்சி நடைபெற்று வருகிறது என்பதுதான் என்று சரித்திரம் சொல்லும். எனினும் இவை அனைத்துக்கும் சில அனாதை குழந்தைகளுக்கு முதற்கண் நன்றியைச் சொல்ல வேண்டும்.

View more on kizhakkutoday.in