Tamilசெய்திகள்

சதீஸ்கரில் 7.60, மத்திய பிரதேசத்தில் 74 சதவீதம் வாக்குப் பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைவர் கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் வாக்குச்சாவடி வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

இதேபோல், சத்தீஸ்கரில் 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 70 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில், சத்தீஸ்கரில் இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் அங்கு 70.60 சதவீத வாக்குகள் பதிவாகின.

மத்திய பிரதேசத்தில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.