Tamilசெய்திகள்

சந்திரயாந்-3 விண்கலம் ஜூலை 13 ஆம் தேதி விண்ணில் செலுத்துப்படுகிறது

இந்தியாவில் சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணியை இஸ்ரோ முடித்துள்ளது. சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாக இந்த சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விண்கலம் ஆனது தரை இறங்குதல் (லேண்டர்) மற்றும் உலாவுதல் (ரோவர்) கட்டமைப்புகளை கொண்டுள்ளது.

இதற்கிடையே, விண்கல பரிசோதனை பணிகள் நடைபெற்று வந்தன. சந்திரயானை ஏந்திச் செல்லும் மார்க்-3 ராக்கெட்டின் பரிசோதனையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும்.

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறுகையில், நிலவுக்குச் செலுத்துவதற்கு சந்திரயான்-3 விண்கலம் தயாராக உள்ளது. ஜூலை மாதம் 13-ம் தேதி மதியம் 2.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என தெரிவித்துள்ளார். இந்தியாவின் அதிக கனம் வாய்ந்த மார்க்-3 என்ற ராக்கெட் உதவியுடன் விண்கலம் செலுத்தப்படும்.