Tamilவிளையாட்டு

சுப்மன் கில்லை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சுப்மன்கில் (104 ரன்) சதம் அடித்தார். 22-வது டெஸ்டில் ஆடும் அவர் 3-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அவர் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். 12 இன்னிங்சுகளுக்கு பிறகு அவர் செஞ்சூரி அடித்துள்ளார்.

இந்த நிலையில் சுப்மன் கில்லை தனித்துவத்தின் சகாப்தம் என டெண்டுல்கர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

சுப்மன்கில்லின் இன்னிங்ஸ் அவரது திறமையை வெளிப்படுத்துகிறது. சரியான நேரத்தில் இந்த சதத்தை அடித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.