Tamilசெய்திகள்

சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது

வங்க கடலில் கடந்த 13-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது.

அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று (வியாழக்கிழமை) நெருங்குகிறது.

இதனை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கும்  ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.