Tamilசெய்திகள்

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்!

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த மாதம் 9-ம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

பெற்றோரை பிரிந்து இருந்ததால் மன அழுத்தம் காரணமாக பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டதாக விடுதி காப்பாளர் லலிதாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே, தனது மகளின் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பாத்திமாவின் தந்தை லத்தீப் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *