Tamilசென்னை 360

சேப்பாக்கம் நவாப் அரண்மனை

புகழ்பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் இன்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆனால் ஒரு காலத்தில் அது புகழ்பெற்ற ஓர் அரண்மனையின் பகுதியாக இருந்தது. மைதானத்தின் வாயில் தூண்கள் இன்றும் அரண்மனையின் கட்டடக்கலை பாணியைக் கொண்டுள்ளன.

கிரிக்கெட் மைதானம் மட்டுமல்ல. இன்றைய பொதுப்பணித்துறை வளாகம், பல்கலைக்கழகம், மற்றும் அரசினர் தோட்டத்தின் ஒரு பகுதியும் அக்காலத்தில் அரண்மனை வளாகத்துக்குள்தான் இருந்தன.

கர்நாடக நவாபுகள் 1690 மற்றும் 1855 க்கு இடையில் தென்னிந்தியாவில் ஒரு பெரும் பகுதியை ஆண்டனர். டெல்லியின் முகலாயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது அவர்களது ராஜ்ஜியம். மெட்ராஸுக்கு வடக்கே ஆற்காட்டில் தலைநகரைக் கொண்டிருந்தனர் நவாபுகள்.

கிழக்கிந்திய நிறுவனம் தனது கோட்டையைக் கட்டிய நிலம் ஆரம்பத்தில் விஜயநகரப் பேரரசில் இருந்தது. அவர்களிடமிருந்து கோல்கொண்டாவிற்குச் சென்றது. ஔரங்கசீப் கோல்கொண்டாவைத் தோற்கடித்தபோது, மெட்ராஸ் முகலாய எல்லைக்குள் நகர்ந்தது.

View full article at kizhakkutoday.in…