Tamilசெய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீர் சந்திப்பு

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை எதிர்க்கட்சிகள் (I.N.D.I.A.)கூட்டணியினர் சந்திக்க உள்ளனர். மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் மனு அளிக்க உள்ளன. மேலும், பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறாதது குறித்தும் முறையிட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்துப் பேசினார் என ஜனாதிபதி மாளிகை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.