Tamilசெய்திகள்

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை தகுதி நிக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2019-ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ளன. முதல் மந்திரியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார்.

இதற்கிடையே, நிலக்கரி சுரங்கத்துக்கான ஒதுக்கீட்டை தன் பெயரிலேயே ஹேமந்த் சோரன் பெற்றுள்ளதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இது குற்றம் என்பதால், அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என அம்மாநில கவர்னரிடம் பா.ஜ.க. மனு கொடுத்தது.

இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் கருத்துக்களை கவர்னர் கேட்டிருந்தார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று தன் பதிலை கவர்னருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.