Tamilவிளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் டிக்கெட் விற்பனை தொடங்கியது

8 அணிகள் இடையிலான 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 23-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரை நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் வருகிற 23-ந் தேதி இரவு 7.15 மணிக்கு நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கும்.

முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சங்கர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9.30 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 3 முதல் மாலை 6 மணி வரையும் டிக்கெட் விற்பனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட் விலை ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.