Tamilவிளையாட்டு

டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ரா பங்கேற்க மாட்டார் – பிசிசிஐ அறிவிப்பு

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பயிற்சின் போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா விலகினார். மேலும், உலகக்கோப்பை டி20 தொடரிலும் பும்ரா பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவியது. அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் என பி.சி.சி.ஐ. நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவக் குழு மற்றும் நிபுணர்களுடன் நடைபெற்ற விரிவான மதிப்பீடு மற்றும் ஆலோசனைக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி20 உலக கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகியது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதில் அணியில் இடம் பெற உள்ள வேகப்பந்து வீச்சாளர் பெயரை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என தெரிகிறது.