Tamilசெய்திகள்

தங்கம் விலை உயர்வு – ஒரு சவரன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. சில வாரம் திடீரென்று உயர்வதும், சில வாரம் திடீரென்று குறைவதுமாக மாறி மாறி நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. நேற்று பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.42,600-க்கு விற்கப்பட்டது. இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.43,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று 1 கிராம் ரூ.5,325-க்கு விற்கப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.65 அதிகரித்து ரூ.5,390க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து ரூ.72-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.72,000-க்கு விற்பனையாகிறது.