Tamilசெய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

* தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

* குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும்.

* காற்றழுத்த தாழ்வு பகுதி, தென் தமிழக கடலோரப் பகுதியை நெருங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.