Tamilசெய்திகள்

தாம்பரம் முதல் கடற்கரை வரை நாளை கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தெற்கு ரெயில்வேயின் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந்தேதி) நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தாம்பரம் முதல் கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.