Tamilசெய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தேமுதிக நிறுவனரான விஜயகாந்த் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விட திணறியதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஜயகாந்தில் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், பல அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு, திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.