Tamilசெய்திகள்

நிவர் புயல் பாதிப்பு – சென்னையில் இன்று மத்திய குழு ஆய்வு

நிவர் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட மத்திய உள்துறை இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் குழு ஒன்றை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.

இந்த மத்திய குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மனோகரன், ரணன்ஜெய் சிங், பர்தெண்டு குமார் சிங், ஓ.பி.சுமன், தர்மவீர் ஜா, பால்பாண்டியன், ஹர்ஷா ஆகிய 7 அதிகாரிகள் இடம்பெற்று உள்ளனர்.

சென்னை வந்த மத்திய குழுவினர் 2 பிரிவுகளாக பிரிந்து சென்று தமிழகத்தில் புயல், மழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுகின்றனர்.

அதன்படி, இன்று மத்திய குழுவினர் வேளச்சேரியில் ராம்நகர் மற்றும் பள்ளிக்கரணை பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வில் ஈடுபட்டனர்.