Tamilசெய்திகள்

நேபாளத்தில் இந்திய மலையேற்ற வீரர் மாயம் – தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் கிஷன்கர்க் பகுதியைச் சேர்ந்தவர் அனுராக் மாலு (34). மலையேற்ற வீரர்.

நேபாளம் நாட்டில் உள்ள உலகின் உயரமான சிகரங்களில் 10-வது சிகரமான மவுன்ட் அன்னபூர்னா பகுதிக்குச் சென்றார். நேற்று வரை முகாம் திரும்பவில்லை. இதையடுத்து அவர் மாயமானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேபாள சிகரத்தில் மாயமான அனுராக் வேலுவைத் தேடும் பணியில் அந்நாட்டு ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.