Tamilசெய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுதந்திர தின விழாவுக்கு செல்ல வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு

சுதந்திர தின விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் பங்கேற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் 15ந்தேதி காலை 8.45க்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்றுகிறார்.

* வீடுகளுக்கே சென்று தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி ஆட்சியர் மரியாதை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* விடுதிகளுக்கு நேரில் சென்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனிப்பு பெட்டகம் தர முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.

* கொரோனா பணியில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் சிறப்பிக்கிறார்.

* சுதந்திர தின நிகழ்ச்சிகளை டிவி, வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* சுதந்திர தின விழாவை காண பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் நேரில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *