Tamilவிளையாட்டு

புரோ கபடி லீக் – தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் வீழ்ந்த பாட்னா பைரேட்ஸ்

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், பாட்னா பைரேஸ் அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பாட்னா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 26 – 15 என முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் தெலுங்கு டைட்டன்ஸ் அணியினர் அபாரமாக விளையாடினர். ஆனாலும் பாட்னா அணி வீரர்கள் அவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து விளையாடினர்.

இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 41 – 36 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு கிடைத்த 8வது வெற்றி ஆகும். இதன்மூலம் பி பிரிவில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது.

இந்த தொடரில் மூன்றாவது முறையாக பாட்னா பைரேட்ஸ் அணியை தெலுங்கு டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *