Tamilசெய்திகள்

மறுகூட்டலுக்காக நாளை முதல் விண்ணப்பிக்கலாம் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதனை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் தேர்ச்சி விகிதம் அரை சதவீதம் அதிகமாகும். மாணவ-மாணவிகள் தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொண்ட பின்னர் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்வதற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் அல்லது பள்ளிகள் மூலமும் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினாலோ, விடைத்தாள் நகல் பெறவோ விண்ணப்பிக்கலாம்.

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் துணைத் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.