Tamilசென்னை 360

மியூசிக் அகாடமி

வரலாற்றின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தமிழக அரசர்கள் ஒவ்வொருவராக அழியும்வரை அவர்கள் பாதுகாப்பின் கீழ் கலாச்சாரம் இருந்தது.

கலையை ஆதரித்த கடைசி மன்னர்களாம் தஞ்சாவூர் சரபோஜிகள். அவர்களின் கீழ் கர்நாடக இசை அதன் உறுதியான அடித்தளத்தை அமைத்துக் கொண்டது.

அதன்பின் 1900 வரை, தமிழகத்தில் கலாச்சாரத்தை அனுபவிக்க இரண்டு வழிகள்தான் இருந்தன. ஒன்று திருவிழாக்கள் நடக்கும் பொது இடங்களில் இலவசமாக அனுபவிக்கலாம். ஆனால் அது ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்று என்று அவ்வப்போதுதான் நடக்கும். அடிக்கடி நடப்பது பணம் புரளும் வீடுகளில் மட்டும் தான்.

மிராசுதாரர்கள் அல்லது ஜமீன்தார்கள் போன்ற புரவலரின் நான்கு சுவர்களுக்குள்தான் இசை அடங்கியிருந்தது. அழைப்பின் பேரில் மட்டுமே மற்றவர் நுழைய முடியும். மாயவரத்தில் ஒரு மிராசுதாரரின் வீட்டுக் கல்யாணத்தில் நடந்த கச்சேரியில் அழைப்பில்லாமல் சென்று, தான் இசையைக் கேட்டதாக கல்கி எழுதுவார்.

View full article at kizhakkutoday.in