Tamilசெய்திகள்

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் ப்ரூஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து திமுக தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பனும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்க்கு வாக்குகள் திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நேற்று திடீரென வருவமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த தகவல் அறிந்து அவரது ஆதராவளர்களும், திமுகவினர் அலுவலம் முன் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வருமானவரித்துறை உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி பாக முகவர்கள், வட்ட செயலாளர்களுக்கு பணம் வழங்கியதற்கான ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல் வெளியாகின.

அதேசமயத்தில் தன்னுடைய அலுவலகத்தில் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவித்த ஆவுடையப்பன், தன்னை பிரசாரம் செய்ய விடாமல் சுமார் இரண்டு மணி தடுத்து வைத்தனர் எனக் குற்றம்சாட்டினார்.