Tamilவிளையாட்டு

முப்படைகளுக்கான கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது

முப்படை வீரர்களுக்கான 70-ஆவது கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ரயில்வே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

கிழக்கு கப்பல்படை தலைமையின் கீழ் முதன் முறையாக நடைபெறும் இந்த போட்டியை கப்பல் படையின் தலைமை மருத்துவ அதிகாரி ஆர் ரவி தொடங்கி வைத்தார்.

ஒருமாத காலம் நடைபெறும் இந்த தொடரில் இந்திய ராணுவம் சிவப்பு, இந்திய ராணுவம் பச்சை, இந்திய கப்பல்படை மற்றும் இந்திய விமானப்படை உள்ளிட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த போட்டிகள் அக்டோபர் மாதம் 2ந் தேதிவரை 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி-20 போட்டிகளாக நடைபெறுகிறது.