Tamilவிளையாட்டு

லக்சயா சென்னுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

 

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென், டென்மார்க்கின் விக்டர் விக்டர் ஆக்சல்சென்னை எதிர்கொண்டார். இதில் 21-10, 21-15 என்ற செட் கணக்கில் விக்டர் ஆக்சல்சென் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார்.

இந்நிலையில் லக்சயா சென்னுக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் நீங்கள் துணிச்சலையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

உற்சாகமான போராட்டத்தை நடத்தி உள்ளீர்கள். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள். வெற்றியின் புதிய உயரங்களை நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சென்னுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

நீங்கள் யாருக்கும் இரண்டாவது இல்லை, நீங்கள் 100 கோடி இதயங்களை வென்றுள்ளீர்கள். அற்புதமான விளையாட்டை வெளிப்படுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு தமது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.