Tamilசென்னை 360

வள்ளுவர் கோட்டம்

நுங்கம்பாக்கம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நிரம்பி வழிகிறது, ஆயிரக்கணக்கான வாகனங்கள் இலக்கை அடையும் ஆர்வத்தில் பொறுமையின்றித் தங்கள் ஹார்ன்களை ஒலிக்கின்றன.

அருகில் உள்ள ஏரிக்கரை மாரியம்மன் கோயிலை யாரும் கண்டுகொள்வதில்லை. முன்னொரு காலத்தில் ஏரி நிரம்பி வழியும் வெள்ளத்திலிருந்து அருகிலுள்ள குடியிருப்புகளைக் காப்பாற்றியதற்காக இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று அந்த மாரியம்மன்கூட தனக்குப் பெயரைக் கொடுத்த ஏரியைத் தீவிரமாகத் தேடத்தான் வேண்டும்.

ஆம். மெட்ராஸுக்கு மேற்கே ஒரு பெரிய ஏரி இருந்தது. சில இடங்களில் 5 மைல் நீளமும் 2 மைல் அகலமும் கொண்டது. ‘லாங்க் டாங்க்’ என்று பெயர்.

ஏரியை ஒட்டியிருந்த நுங்கம்பாக்கம் என்பது சென்னையின் மிகவும் பழமையான கிராமம். மெட்ராஸைப் பற்றி எழுதப்பட்ட சமஸ்கிருதப் படைப்பான சர்வதேசவிலாசாம் இதை ‘நுங்காபுரி’ என்று அழைக்கிறது.

View more on kizhakkutoday.in