Tamilசெய்திகள்

விக்ராந்த் கப்பல் மூலம் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்தது இந்தியா

இந்தியா முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது.

இந்த ஆற்றலை கொண்டுள்ள பிற நாடுகள் என்று பார்த்தால் அவை, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா, பிரான்ஸ் ஆகும். இந்த 5 நாடுகளும் வல்லரசு நாடுகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகள் ஆகும்.

இந்தியாவும் உள்நாட்டில் விமானம்தாங்கி போர்க்கப்பலை வடிவமைத்து கட்டியதின் மூலம் இந்த வளர்ந்த நாடுகளின் பட்டியலில் தன்னை சேர்த்துக்கொண்டுள்ளது.