Tamilசெய்திகள்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் – மு.க.ஸ்டாலின் பேச்சு

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தடையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக-கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பச்சை நிற மாஸ்க் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உண்ணாவிரதத்தில் முத்தரசன், கனிமொழி, பாரிவேந்தர், ரவிபச்சமுத்து, வைகோ, திருநாவுக்கரசர், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது.

* வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்.

* போராடும் விவசாயிகளை அன்னிய கைக்கூலிகள், தீவிரவாதிகள் என மத்திய அரசு முத்திரை குத்துகிறது.

* வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் தேவையில்லை. முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்காக உண்ணாவிரதத்தில் தலைவர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

‘விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்பப்பெறு’ என்ற வாசகத்துடன் கூடிய மாஸ்க்குகளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அணிந்துள்ளனர்.