கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துரையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 13 இடங்களில் சோதனை நடப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும், திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
அவர் அமைச்சராக இருந்த போது பொதுப்பனித்துறையில் கமிஷன் பெற்றதாக புகார் எழுந்தது. பணி நியமனத்திற்கும் பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.