செம்பரம்பாக்கம் செல்லும் முதலமைச்சர் ரோட்ஷோ
சென்னைக்கு கூடுதலாக செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக காரில் ரோடு ஷோவாக செம்பரம்பாக்கம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருமருங்கிலும் குவிந்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 265 மி.லி. குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
