Tamilவிளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி – 5-0 என்ற கோல் கணக்கில் மும்பையை கோவா வீழ்த்தியது

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கோவாவில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் எப்.சி. கோவா அணியும், மும்பை சிட்டி எப்.சி அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கோவா அணியினர் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் பெரான் கரோமினஸ் முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என கோவா அணி முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 55வது நிமிடத்தில் ஜாக்சந்த் சிங் ஒரு கோலும், 61-வது நிமிடத்தில் எடு பீடியா ஒரு கோலும், 84 மற்றும் 90 வது நிமிடத்தில் பலங்கா பெர்னாண்டசும் கோல் அடித்தனர்.

இறுதியில், எப்.சி. கோவா அணி 5 – 0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எப்.சி. அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் கோவா முதல் இடத்துக்கு முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *