மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஐந்து பேர் கொண்ட கும்பலால் வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கடுமையான கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
இரத்தக் கறைகள் படிந்த அந்தச் சம்பவ இடத்தின் அதிர்ச்சியூட்டும் காணொளியைப் பகிர்ந்துள்ள அவர், தமிழகத்தில் போதைப்பொருள் கடத்துபவர்கள், பாலியல் குற்றவாளிகள் மற்றும் கொலைகாரர்களுக்குக் காவல்துறையினரின் பிடி தளர்ந்து, அவர்களுக்குக் கூடுதல் சுதந்திரம் கிடைத்துள்ளது போல் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த காலச் சம்பவங்களில் இருந்து மாநிலக் காவல்துறை எந்தவொரு பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை என்று சாடியுள்ள அண்ணாமலை, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு இன்னும் தங்களது தேர்தல் வெற்றிப் பணிகளின் கொண்டாட்ட மனநிலையில் இருந்து வெளியே வராமல், களத்தில் நிலவும் இத்தகைய மோசமான எதார்த்தச் சூழலையும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் எதிர்கொள்ளத் தவறி வருவதாகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.