நீட் போராட்டம்! – மத்திய அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி
ஜனநாயகத்தில் போராட்டம் நடத்துவது என்பது மக்களின் அடிப்படை உரிமை என்று குறிப்பிட்டுள்ள பா.ஜ.க-விலிருந்து விலகிய அண்ணாமலை, நீட் தேர்வுக்கு எதிரான போராட்ட விவகாரத்தில் மத்திய அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
“போராட்டம் ஒரு தீவிரமான கட்டத்தை எட்டும் வரை பேச்சுவார்த்தை ஏன் தாமதப்படுத்தப்பட்டது?
பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு உங்களை எது காத்திருக்க வைத்தது?”
ஆகிய கேள்விகளை முன்வைத்து அவர் மத்திய அரசைச் சாடியுள்ளார்.
மேலும், போராட்டம் வன்முறையாக மாறாமல் தடுத்து, போராடும் மாணவர்களுடன் உடனடியாக உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சனைக்குச் சுமூகத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
