Tamilசெய்திகள்

நத்தம் பறக்கும் பாலத்தில் தொழிலாளி தற்கொலை!

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் மதுரை தல்லாகுளம் பகுதியில் இருந்து நத்தம் வரை 35 கிலோமீட்டருக்கு 1,028 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி பணி நிறைவு செய்யப்பட்டது.

இதற்காக மதுரை பாண்டியன் ஓட்டலில் இருந்து ஊமச்சிகுளம் இடையேயான 7.3 கிமீ தூரத்திற்கு பறக்கும் மேம்பாலம் அமைக்கப்பட்டது. பாலத்தின் அடியில் 192 ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2023- ஏப்ரல் மாதத்தில் பாலம் திறக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் மிக நீளமான பறக்கும் பாலம் என்று கூறப்படும் இப்பாலத்தில் இன்று (ஏப்ரல் 25) காலை 55 வயது மதிக்க ஒருவர் தூக்கில் இறந்த நிலையில் இருந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

தற்கொலை செய்து கொண்டவர், ஊமச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பது தெரிய வந்தது. தூய்மை தொழிலாளரான முத்தையா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.