Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான நேற்று முன் தின ஆட்டத்தில் மும்பை இந்தியன் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்கவில்லை. அதிக நேரம் எடுத்துக் கொண்டது.

மெதுவாக பந்து வீசியதற்காக கேப்டன் என்ற முறையில் ரோகித்சர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.