Tamilசெய்திகள்

அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை – அமலாக்கத்துறை அறிவிப்பு

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டுக்கு நேற்று காலை 7 மணியளவில் 7 பேர் அடங்கிய அமலாக்கத்துறை தனிப்படை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருடன் வந்தனர்.

மேலும், அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் இல்லம் மற்றும் அவரது அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன்படி நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்ற சோதனை 20 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமலாக்கத் துறை துணை இயக்குநர் கார்த்திக், அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை என தெரிவித்தார்.