Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – போபண்ணா ஜோடி 3 வது சுற்றுக்கு முன்னேறியது

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி வரும் 28-ம் தேதி வரை நடக்கவுள்ளது.

இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேன்-எட்வர்ட் வின்டர் ஜோடியுடன் மோதியது.

இதில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் போபண்ணா ஜோடி ஆஸ்திரேலிய ஜோடியை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறியது.