Tamilசெய்திகள்

இணையத்தில் வைரலாகும் ரெயில்வே அதிகாரி பகிர்ந்த புலி பாய்ச்சல் வீடியோ!

வன விலங்குகள் பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அவற்றில் சில வீடியோக்கள் வைரலாகி பயனர்களை ரசிக்க செய்கிறது. அந்த வகையில் இந்திய ரெயில்வே அதிகாரியான ஆனந்த் ரூபனகுடி என்பவர் பகிர்ந்துள்ள புலியின் பாய்ச்சல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘வாழ்நாளில் ஒருமுறை எடுக்கப்பட்ட படம்’ என்ற குறிப்புடன் அவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஒரு நீரோடையின் அருகே புலி ஒன்று கம்பீரமாக நடந்து வருகிறது. ஓடையின் ஒரு கரைக்கு புலி வந்ததும் அந்த கரையில் இருந்து மற்றொரு கரைக்கு பாயும் காட்சிகள் பயனர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் நம்ப முடியாத அளவுக்கு அழகாக இருப்பதாக வியக்கின்றனர். இதை எடுத்த உங்களை ஆஹா என்று சொல்ல வைக்கும் அளவுக்கு இருப்பதாக பயனர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ சுந்தரவதன காடுகளில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் சில பகுதிகளில் சுந்தரவதன காடுகள் பரந்து விரிந்து காணப்படுகின்றன.